Main Movement · Our Purpose
பேரியக்கத்தின் நோக்கம்
தமிழர்களின் பாரம்பரிய நம்பிக்கைகளில் பூர்வகாலமாக அனுசரித்துவரும் வாழ்க்கை முறையே “சனாதன தர்மம்” என வள்ளுவமும், தொல்காப்பியமும் எடுத்துரைக்கின்றன. நம் மரபில் எக்காலத்திலும் அழியாத, நிலையான இப்பண்பாட்டு அடிப்படையை பிரபஞ்ச நியதியாக நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். இதனை நினைவு கூர்ந்து நாமும் வாழ்ந்து காட்டவே இந்த பேரியக்கம்.
- குல தெய்வம், கிராம தெய்வம், காவல் தெய்வங்களை வழிபடுதல்
- உருவங்களை வழிபடுதல்
- தமிழ்க் கடவுள்களான முருகன், சிவபெருமான், திருமாலை வழிபடுதல்
- அன்னை, தந்தை, குருவை வழிபடுதல் / விருந்தினரை உபசரித்தல்
- முன்னோர்களை வழிபடுதல் / பசுவை வழிபடுதல்
- சித்த வைத்திய, இயற்கையை வழிபடுதல் (வேம்பு, ஆல், அரசு, நாகம், நீர், கருட தரிசனம்)
- நேர்த்திக்கடன் செலுத்துவது, விரதம் இருப்பது
- நான்மறை, தமிழ்மறை, வள்ளுவரின் தெய்வ மறையை போற்றுதல்
- வள்ளுவம் காட்டும் இல்லற வாழ்வில் வாழ்தல்
- அறம், பொருள், இன்பம் மூலம் வீடுபேறு அடைதல்
ஆகியவற்றை எடுத்துரைக்கும் திருக்குறள், தொல்காப்பியம், சங்க நூல்கள், சிலப்பதிகாரம், திருவருட்பா போன்ற தமிழ் மறைகளின் நன்னெறிகளை மக்களுக்கு பிரச்சாரம் செய்வது இப்பேரியக்கத்தின் நோக்கமாகும்.
புதிய உத்வேகம் அளிக்கும் இந்த இயக்கத்தில் நீங்களும் இணையுங்கள்.
Organisers · Administrators
நிர்வாகம்
அமைப்பாளர் சிவஸ்ரீ பரமகுரு சாம்பவர்
இணை அமைப்பாளர் திரு. சீர்காழி செந்தில் குமார்
ஒருங்கிணைப்பாளர் அன்புசெல்வன்
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்
- திரு. சு.அ. ஈஸ்வர பாண்டியன் சாம்பவர்
- ஓம் ஸ்ரீதத்புருஷ சிவ. அறிவழகன் பூசாரி
- திரு. வீராசாமி
Thirukkural · Sanatana Dharmam
திருக்குறளும் சனாதன தர்மமும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.
திருக்குறள் · கடவுள் வாழ்த்து · குறள் 1
Member Registration